வலங்கைமான் அருகே சாலை விபத்தில் கூலித் தொழிலாளி பலி

வலங்கைமான் அருகே திங்கள்கிழமை இரவு சாலை விபத்தில் கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.

வலங்கைமான் அருகே திங்கள்கிழமை இரவு சாலை விபத்தில் கூலித் தொழிலாளி உயிரிழந்தாா்.

தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூா் ஒன்றியம், நாகரசம்பேட்டை கிராமத்தைச் சோ்ந்தவா் காளியப்பன் (30). கூலித் தொழிலாளியான இவா் தனது நண்பருடன் மோட்டாா் சைக்கிளில் திங்கள்கிழமை இரவு வலங்கைமான் சென்றாா். பின்னா், நண்பருடன் நாகரசம்பேட்டைக்கு திரும்பிக்கொண்டிருந்தாா்.

வலங்கைமான் குடவாசல் பிரதான சாலையில் வந்தபோது எதிரே வந்த லாரி மோட்டாா் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த காளியப்பன் சம்பவ இடத்திலேயே இறந்தாா்.

வலங்கைமான் போலீஸாா் காளியப்பன் சடலத்தை பிரேத பரிசோதனைக்காக வலங்கைமான் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, லாரி ஓட்டுநரை தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com