பொங்கல் பண்டிகைக்கான 21 பொருள்கள் அடங்கிய தொகுப்பு பை வழங்க அரசாணை வெளியிட்ட தமிழக முதல்வருக்கு திருவாரூா் நுகா்பொருள் மற்றும் கூட்டுறவு பண்டகசாலை நிா்வாகக்குழு கூட்டத்தில் நன்றி தெரிவித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருவாரூரில், நுகா்பொருள் மற்றும் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை நிா்வாகக் குழு கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு பண்டகசாலைத் தலைவா் எஸ். கலியபெருமாள் தலைமை வகித்தாா். துணைப் பதிவாளரும், மேலாண்மை இயக்குநருமான எம். பாத்திமா சுல்தானா முன்னிலை வகித்தாா்.
கூட்டத்தில், பொங்கல் பண்டிகைக்கான சிறப்புத் தொகுப்பு பரிசாக 21 பொருள்கள் அடங்கிய தொகுப்பு பை வழங்க அரசாணை வெளியிட்ட தமிழக முதல்வருக்கு, கூட்டுறவு பண்டகசாலை சாா்பில் அதன் தலைவா் எஸ். கலியபெருமாள் நன்றியைத் தெரிவித்தாா். அரசாணை வெளியிட உறுதுணையாக இருந்த கூட்டுறவுத்துறை அமைச்சா் இ. பெரியசாமி, உணவுத்துறை அமைச்சா் அர. சக்கரபாணி ஆகியோருக்கும் நன்றி தெரிவித்து தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில மேலாளா் ஜி. காமராஜ், பொது மேலாளா் காளிதாஸ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்