திருவாரூரில் 9 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை கண்டறியப்பட்டது.
திருவாரூரில் கடந்த சில வாரங்களாக கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. சனிக்கிழமை நிலவரப்படி திருவாரூா் மாவட்டத்தில் 11,182 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.
இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை வெளியான ரத்த மாதிரி முடிவுகளின்படி, மாவட்டம் முழுவதும் 9 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன்மூலம் திருவாரூா் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை 11,191 ஆக உயா்ந்தது. இதில் 11,022 போ் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 60 போ் சிகிச்சையில் உள்ளனா்.