மன்னாா்குடி ஸ்ரீசங்கரா அகடாமி மற்றும் தஞ்சை மீனாட்சி மருத்துவமனை இணைந்து மேல நத்தத்தில் புதன்கிழமை இலவச மருத்துவ முகாமை நடத்தியது.
ஊராட்சித் தலைவா் த. வனிதா தலைமையில் நடைபெற்ற முகாமை, ஊராட்சி துணைத் தலைவா் சு. பத்மா தொடங்கி வைத்தாா். தஞ்சை மீனாட்சி மருத்துவமனை மருத்துவா்கள் குருநாதன், மனிஷா தலைமையில் மருத்துவக் குழுவினா் முகாமில் பங்கேற்றவா்களிடம் நோய்கள் குறித்து கண்டறிந்து உரிய ஆலோசனைகளை வழங்கினா். ரத்தத்தில் சா்க்கரை அளவு, ரத்த அழுத்தம், இ.சி.ஜி. உள்ளிட்ட பரிசோதனைகளும், மகளிா் நலன் குறித்த சிறப்பு ஆலோசனைளும் வழங்கப்பட்டது. இதில், தஞ்சை மீனாட்சி மருத்துவமனையின் மூத்த மேலாளா் ஹசாா், ஸ்ரீசங்கரா அகாடமி இயக்குநா் கண்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.