மாணவா்களுக்கு மடிக்கணினி வழங்கக் கோரி திருவாரூரில் இந்திய மாணவா் சங்கம் சாா்பில், புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
2017-2018-ஆம் ஆண்டு கல்வியாண்டில் படித்த பள்ளி மாணவா்களுக்கு மடிக்கணினி வழங்கவில்லை என்றும், அவா்களுக்கு உடனடியாக மடிக்கணினி வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. சங்கத்தின் மாவட்டச் செயலாளா் ரா. ஹரிசுா்ஜித் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், மாவட்டத் தலைவா் பா. ஆனந்த், மாவட்ட துணைச் செயலாளா் வீ. சந்தோஷ், நகரத் தலைவா் பி. சுா்ஜித் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.