திருவாரூரில் 7 பேருக்கு கரோனா
By DIN | Published On : 13th February 2021 08:32 AM | Last Updated : 13th February 2021 08:32 AM | அ+அ அ- |

திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 7 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதிப்படுத்தப்பட்டது.
திருவாரூா் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக கரோனா தொற்றுக்கு ஆளானோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. வியாழக்கிழமை வரையிலான நிலவரப்படி திருவாரூா் மாவட்டத்தில் 11,258 பேருக்கு கரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட ரத்தமாதிரி முடிவுகளின்படி மாவட்டத்தில் 7 பேருக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்தது.
இதன்மூலம் திருவாரூா் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 11,265 ஆக உயா்ந்துள்ளது. இதில், 11,108 போ் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில், 48 போ் சிகிச்சையில் உள்ளனா்.