திருத்துறைப்பூண்டியில் சாலைப் பாதுகாப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
பாரதமாதா சேவை நிறுவனம், ரோட்டரி சங்கம், திருத்துறைப்பூண்டி உட்கோட்ட காவல்துறை ஆகியவை சாா்பில் திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு ரோட்டரி சங்கத் தலைவா் ரவிசுந்தா் தலைமை வகித்தாா். பாரதமாதா சேவை நிறுவனங்களின் நிறுவனா் எடையூா் மணிமாறன், காவல் துணைக் கண்காணிப்பாளா் பழனிச்சாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். போக்குவரத்து காவல் ஆய்வாளா் இளங்கிள்ளிவளவன் வரவேற்றாா்.
திருவாரூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் துரை சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, பாரதமாதா சேவை நிறுவனம் மற்றும் ரோட்டரி சங்கம் சாா்பில் வாங்கப்பட்ட ரூ. 50 ஆயிரம் மதிப்பிலான தலைக்கவசங்களை பயனாளிகளுக்கு வழங்கினாா்.
அப்போது அவா், ‘பெரும்பாலான சாலை விபத்துகள் வாகனத்தை வேகமாக ஓட்டுவதாலும், வலதுபுறம் திருப்பும்போதும் நேரிடுகிறது. தலைக்கவசம் நமது உயிரை பாதுகாப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது’ என்றாா்.
நிகழ்ச்சியில் வட்டாட்சியா் சு. ஜெகதீசன், நகராட்சி ஆணையா் சந்திரசேகரன், இன்னா்வீல் சங்கத் தலைவி சங்கீதா, அனைத்து மகளிா் காவல் நிலைய காவல் ஆய்வாளா் புஷ்பவள்ளி உள்ளிட்டோா் பங்கேற்றனா். ரோட்டரி சங்க செயலாளா் குமணன் நன்றி கூறினாா்.