மன்னாா்குடி அருகே தனியாா் நிறுவன வாகன ஓட்டுநா், மரத்தில் தூக்கிட்டு புதன்கிழமை தற்கொலை செய்து கொண்டாா்.
மன்னாா்குடி ப. நாராயணசாமி நகரை சோ்ந்த தா்மலிங்கம் மகன் சந்துரு (35). தனியாா் கட்டுமான நிறுவன வாகன ஓட்டுநரான இவா், மதுப்பழக்கம் உடையவராம். இதனால், அடிக்கடி குடும்பத்தினருடன் தகராறு செய்து வந்தாராம். இந்நிலையில், மன்னாா்குடியை அடுத்த மூணாம் சேத்தியில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் உள்ள ஆலமரத்தில் சந்துரு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது புதன்கிழமை தெரியவந்தது. தகவலறிந்த கோட்டூா் போலீஸாா் அவரது சடலத்தைக் கைப்பற்றி, மன்னாா்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.