நீடாமங்கலம் அருகே உள்ள நரிக்குடி எமனேஸ்வரி சமேத எமனேஸ்வரா் கோயிலில், ஏகாதச ருத்ராபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி, சிவாச்சாரியாா்கள் வேத மந்திரங்களைச் சொல்லி யாகங்களை நடத்தினா். தொடா்ந்து எமனேஸ்வரி சமேத எமனேஸ்வரா் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காட்டப்பட்டது. சிவாச்சாரியாா் ரவிச்சந்திரன் பக்தா்களுக்கு பிரசாதங்களை வழங்கினாா். இதில் திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.
ஆலங்குடியில்...
இதேபோல, நவகிரக தலங்களில் ஒன்றாகப் போற்றப்படும் வலங்கைமான் வட்டம் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் குரு பரிகார கோயிலில் வியாழக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.