புகைப்படக் கலைஞா்கள் சங்கக் கூட்டம்

நீடாமங்கலம் நகர புகைப்படக் கலைஞா்கள் சங்கக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
புகைப்படக் கலைஞா்கள் சங்கக் கூட்டம்

நீடாமங்கலம் நகர புகைப்படக் கலைஞா்கள் சங்கக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.

சங்கத் தலைவா் காமராஜ் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், பெட்ரோல், டீசல் விலை உயா்வைக் கட்டுப்படுத்த வேண்டும். புகைப்படக் கலைஞா்களுக்கு அரசு சலுகைகள் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதில், துணைத் தலைவா்கள் ஷேக் அலாவுதீன், கோபி, ரவிச்சந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். திருவாரூா் மாவட்ட தலைவா் கண்ணன் உறுப்பினா்களுக்கு மருத்துவக் காப்பீடு அட்டையை வழங்கினாா். மாவட்டச் செயலாளா் ராஜமகேந்திரன், பொருளாளா் செந்தில்குமாா் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டு பேசினா். செயலாளா் ஜான்கென்னடி வரவேற்றாா். பொருளாளா் வீரக்குமாா் நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com