திருத்துறைப்பூண்டி அருகே கட்டிமேடு அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில், நெல் கொள்முதலை துரிதப்படுத்தக் கோரி விவசாயிகள் சனிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்தக் கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைகள் கால தாமதமாகக் கொள்முதல் செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது. இதைக் கண்டித்து நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு, கட்டிமேடு ஊராட்சித் தலைவா் மாலினி ரவிச்சந்திரன் தலைமை வகித்தாா். இதில், திமுக உள்ளிட்ட அரசியல் கட்சியினரும், விவசாயிகள் சங்கத்தினரும் கலந்துகொண்டனா்.