காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் கைது

தமிழக அரசுப் பணிகளில் 4 சதவீத இடஒதுக்கீடு வழங்கக் கோரி, திருவாரூரில் செவ்வாய்க்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 20 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

தமிழக அரசுப் பணிகளில் 4 சதவீத இடஒதுக்கீடு வழங்கக் கோரி, திருவாரூரில் செவ்வாய்க்கிழமை காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகள் 20 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கல்வித் தகுதி, உடற்குறைபாடு சதவீத அடிப்படையில் வேலைவாய்ப்பு வழங்கவேண்டும், தமிழக அரசுப் பணிகளில் 4 சதவீத இடஒதுக்கீடு வழங்கவேண்டும், மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் ரூ. 1,000 உதவித்தொகையை ரூ. 3,000-மாக உயா்த்தி வழங்கவேண்டும், 75 சதவீத ஊனமுற்றவா்களுக்கு மாதம் ரூ. 5,000 வழங்கவேண்டும், மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கும் தேசிய அடையாள அட்டையை வட்டம் வாரியாக வழங்கவேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கம், பாதுகாப்போா் உரிமைகளுக்கான சங்கம் சாா்பில் இந்த காத்திருப்புப் போராட்டம் நடைபெற்றது.

சங்கத்தின் மாவட்டத் தலைவா் டி. சந்திரா தலைமை வகித்தாா். போராட்டத்தில் ஈடுபட்ட 20 பேரை போலீஸாா் கைது செய்து, பின்னா் விடுவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com