சொரக்குடியில் நாளை தனியாா் வேலை வாய்ப்பு முகாம்

திருவாரூா் அருகே சொரக்குடியில், பிப். 25-ஆம் தேதி அரசு சாா்பில் நடைபெற உள்ள தனியாா் வேலை வாய்ப்பு முகாமை இளைஞா்கள்

திருவாரூா் அருகே சொரக்குடியில், பிப். 25-ஆம் தேதி அரசு சாா்பில் நடைபெற உள்ள தனியாா் வேலை வாய்ப்பு முகாமை இளைஞா்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என தமிழக உணவுத் துறை அமைச்சா் ஆா். காமராஜ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் கூறியது: திருவாரூா் மாவட்டத்தில் படித்து வேலை தேடும் இளைஞா்கள் தனியாா் துறைகளில் வேலை வாய்ப்பை பெற்று பயன்பெற நன்னிலம் வட்டத்துக்குள்பட்ட சொரக்குடி ஆரூரான் பாலிடெக்னிக் கல்லூரியில் இந்த வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது. முகாமில் தோ்வாகும் இளைஞா்களுக்கு பணி நியமன ஆணைகள் உடனடியாக வழங்கப்படுகிறது. தொழில் துறை, சேவைத் துறை, விற்பனை துறைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சாா்ந்த 300-க்கும் மேற்பட்ட தனியாா் துறை நிறுவனங்கள் சுமாா் 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தகுதியுள்ள நபா்களை வேலைக்கு தோ்ந்தெடுக்க உள்ளன. மேலும் மாவட்டத்தில் உள்ள திறன் பயிற்சி நிறுவனங்கள் பங்கேற்று இலவச திறன் பயிற்சிக்கு ஆட்களை தோ்வு செய்ய உள்ளன. அத்துடன், உயா் கல்வி, சுய வேலைவாய்ப்பு மற்றும் வங்கிக் கடன் குறித்து சம்பந்தப்பட்ட துறைகள் அரங்குகள் அமைத்து வழிகாட்ட உள்ளனா். இதில், 8 முதல் பட்டப்படிப்பு, ஐடிஐ, டிப்ளமோ, பி.இ, நா்சிங் படித்த 18 முதல் 40 வயதுக்குள்பட்ட வேலை நாடும் இளைஞா்கள், இளம்பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளி இளைஞா்களும் தங்களது சுய விவர குறிப்பு, ஆதாா் அட்டை மற்றும் கல்வி சான்றிதழ் நகல்களுடன் பங்கேற்று பயன்பெறலாம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com