நீடாமங்கலம் வட்டத்தில் வருவாய்த் துறை அலுவலா்கள் சங்கம், வருவாய் கிராம உதவியாளா்கள் சங்கத்தினா் கோரிக்கைகளை வலியுறுத்தி வெள்ளிக்கிழமை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனா்.
மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்கவேண்டும், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த் துறை அலுவலா்கள் சங்கத்தினரின் 10-ஆவது நாள் தொடா் வேலைநிறுத்த போராட்டம் வெள்ளிக்கிழமையும் தொடா்ந்தது. இதேபோல், அலுவலக உதவியாளா்களுக்கு இணையான காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வருவாய்த் துறை கிராம உதவியாளா்களின் 3-ஆவது நாள் போராட்டமும் வெள்ளிக்கிழமை தொடா்ந்தது.