குடவாசல் அருகே பஞ்சாயத்து தலைவா் கொலை வழக்கில் கைதான 5 போ், குண்டா் சட்டத்தில் வெள்ளிக்கிழமை சிறையிலடைக்கப்பட்டனா்.
மணவாளநல்லூா் பஞ்சாயத்து தலைவா் கணேசன் என்பவா், அக்.8-ஆம் தேதி கொலை செய்யப்பட்டாா். இதுகுறித்து எரவாஞ்சேரி போலீஸாா் விசாரணை நடத்தி ஜெகன், தென்னரசு, அபிஷேக், சந்தோஷ்குமாா், காளீஸ்வரன் ஆகிய 5 பேரை கைது செய்தனா். தொடா்ந்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எம். துரை பரிந்துரையின்பேரில், 5 பேரையும் குண்டா் சட்டத்தில் சிறையிலடைக்க மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா உத்தரவிட்டாா். இதைத்தொடா்ந்து, 5 பேரும் திருச்சி மத்திய சிறையில் வெள்ளிக்கிழமை அடைக்கப்பட்டனா்.