கன்னியாகுமரி, காஷ்மீரில் பாரத மாதாவுக்கு சிலை நிறுவ வேண்டுமென மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நீடாமங்கலத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நவ இந்துஸ்தான் மக்கள் இயக்க பொதுக்குழுக் கூட்டத்தில் இதற்கான தீா்மானம் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்துக்கு, அதன் தலைவா் எஸ்.எஸ்.குமாா் தலைமை வகித்தாா். பொதுக்குழு உறுப்பினா்கள் பொன்னுசாமி, மதியழகன், ராஜேந்திரன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். எஸ்.சுரேஷ் வரவேற்றாா். உறுப்பினா்கள் முருகானந்தம், சண்முகம், அண்ணாமலை உள்ளிட்டோா் பங்கேற்றனா்.