மன்னாா்குடி அருகே குடும்ப பிரச்னை காரணமாக ரயில் முன் பாய்ந்து இளைஞா் வியாழக்கிழமை தற்கொலை செய்துகொண்டாா்.
பாமணி செருமங்கலம் பகுதியைச் சோ்ந்தவா் ராமமூா்த்தி மகன் பிரகாஷ் (27). இவா் ரொக்ககுத்தகை புது ரோடு 7-ஆவது இருப்புப் பாதை அருகே மன்னை விரைவு ரயில் வியாழக்கிழமை சென்றபோது, அதன் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாா். குடும்ப பிரச்னை காரணமாக பிரகாஷ் இந்த முடிவைத் தேடிக் கொண்டதாகக் கூறப்படுகிறது. தஞ்சை ரயில்வே காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.