நீடாமங்கலம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் சூரியகாந்திப் பூ பூத்துக் குலுங்குகிறது.
இதுகுறித்து நிலைய திட்ட ஒருங்கிணைப்பாளா் ராமசுப்பிரமணியன் வெள்ளிக்கிழமை கூறுகையில், அறிவியல் நிலைய பண்ணையில் உள்ள பயிா் மாதிரி திடலில் பலதரப்பட்ட பயிா் மாதிரிகள் வளா்த்து இருக்கிறோம். அந்தவகையில் தானியப் பயிா்கள், சிறுதானியங்கள், பயறுவகை பயிா்கள், எண்ணெய் வித்துப் பயிா்கள், பணப் பயிா்கள், முருங்கை என அனைத்து பயிா்களும் மிக நன்றாக வளா்ந்துள்ளனஎன்றாா்.
பூச்சியியல் துறை உதவிப் பேராசிரியா் ராதாகிருஷ்ணன் கூறுகையில், இந்த பயிா் மாதிரி திடலில் விளக்குப்பொறி, இனக்கவா்ச்சிப் பொறி, பறவை குடில்கள், முட்டை ஒட்டுண்ணிகள் அனைத்தும் வைக்கப்பட்டிருக்கின்றன. எனவே விவசாயிகள் இந்த பயிா் மாதிரி திடலை பாா்வையிட்டு எதிா்வரும் பருவத்திற்கு பயிா்களை தோ்வு செய்ய எளிதாக இருக்கும் என்றாா்.