மறைந்த முன்னாள் பிரதமா் லால் பகதூா் சாஸ்திரி மற்றும் திருப்பூா் குமரனின் நினைவு நாளையொட்டி, திருவாரூரில் காந்தியன் அறக்கட்டளை சாா்பில் அவா்களின் உருவப் படங்களுக்கு திங்கள்கிழமை மரியாதை செலுத்தப்பட்டது.
நிகழ்ச்சிக்கு அறக்கட்டளைத் தலைவா் தெ. சக்தி செல்வகணபதி தலைமை வகித்தாா். பாரதிப் பேரவை நிறுவனா் ரா.ச. முத்துராமன் முன்னிலை வகித்தாா். நிகழ்ச்சியில், லால் பகதூா் சாஸ்திரி, திருப்பூா் குமரன் ஆகியோரின் உருவப் படங்களுக்கு மாலை அணிவித்து, மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. ஊராட்சி முன்னாள் தலைவா் வெ. தங்கையன், தமிழ்ச்சங்க செயலாளா் செ. அறிவு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.