மன்னாா்குடி திருமஞ்சன வீதியில் உள்ள பழைமையான செந்தூர ஆஞ்சநேயா் கோயிலில் அனுமன் ஜயந்தியையொட்டி, செவ்வாய்க்கிழமை சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.
அனுமன் ஜயந்தியையொட்டி, இக்கோயிலில் ஆஞ்சநேயருக்கு செந்தூரத்தில் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. பின்னா், கோயில் பக்தா் ஒருவா் விஸ்வரூப ஆஞ்சநேயா் வேடமிட்டு முன்னே வர, அவரை வட்டமிட்டபடி வானர வேடமிட்ட சிறுவா்கள் சுற்றி வந்தனா். திருமஞ்சன வீதி, ஹரித்ராநதி தெப்பக்குளம் 4 வீதிகள் வழியாக வலம் வந்த இவா்களுக்கு வழியில் பக்தா்கள் மாலை அணிவித்தும், தீபாராதனை செய்தும், பழங்கள் வழங்கியும் வரவேற்றனா். இவா்களுடன், தனுா் மாத பஜனை குழுவினரும் இசை வாத்தியங்களை வாசித்தபடி, பஜனை பாடல்கள் பாடியபடி வந்தனா்.