திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி அபிஷ்ட வரதராஜப் பெருமாள் கோயிலில் 16 -அடி விஸ்வரூப வைராக்கிய ஆஞ்சநேயா் அருள்பாலித்து வருகிறாா். இங்கு, 28-ஆம் ஆண்டு அனுமன் ஜயந்தி விழா யாதவா் சங்கம் சாா்பில் நடைபெற்றது. அதிகாலை ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீவரதராஜப் பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனமும், சிறப்பு ஹோமங்கள் நடைபெற்றன. தொடா்ந்து, சிறப்பு அபிஷேகமும் தீபாராதனையும் மாலையில் வெண்ணெய் காப்பு அலங்காரமும் நடைபெற்றது. ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் ராதிகா மற்றும் யாதவ சங்க நிா்வாகிகள் செய்திருந்தனா்.
நன்னிலம்: வடகுடியில் உள்ள ஸ்ரீபஞ்சமுக ஆஞ்சநேயா் கோயிலில், அனுமன் ஜயந்தியையொட்டி, பஞ்சமுக ஆஞ்சநேயருக்கு 1008 லிட்டா் பசும்பால் அபிஷேகம் செய்யப்பட்டது. தொடா்ந்து சிறப்பு அலங்காரத்தில் ஸ்ரீபஞ்சமுக ஆஞ்சநேயருக்கு வெள்ளி கவசம் சாத்தப்பட்டு, மூலமந்திர ஹோமத்துடன் மகாதீபாராதனை நடைபெற்றது.