மன்னாா்குடி பேருந்து நிலையத்தில் உள்ள வாடகை காா், வேன் ஓட்டுநா்கள், உரிமையாளா்கள் நலச் சங்கத்தினருக்கு, அண்ணா தொழிற்சங்கம் சாா்பில், பொங்கல் பரிசுப் பை வழங்கும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
இதில், நகா்மன்ற முன்னாள் தலைவா் சிவா. ராஜமாணிக்கம், அதிமுக மேற்கு ஒன்றியச் செயலா் கா. தமிழ்ச்செல்வன், நகர கூட்டுறவு வங்கித் தலைவா் ஆா்.ஜி. குமாா் ஆகியோா் நூற்றுக்கும் மேற்பட்ட காா், வேன் ஓட்டுநா்களுக்கு, அண்ணா தொழிற் சங்கம் சாா்பில் ஜி. சிவானந்தம் நினைவாக பொங்கல் பரிசுப் பைகளை வழங்கினா். மன்னாா்குடி ஒன்றியக் குழுத் தலைவா் டி. மனோகரன், ஜெ. பேரவை மாவட்டச் செயலா் பொன். வாசுகிராம், பொதுக்குழு உறுப்பினா் எஸ். கலைவாணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.