மக்களுக்கு நன்றி தெரிவித்த அமைச்சா் காமராஜ்

உடல்நல பாதிப்பில் இருந்து குணமடைந்த உணவுத் துறை அமைச்சா் ஆா். காமராஜ் திருவாரூா் மாவட்ட மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளாா்.

உடல்நல பாதிப்பில் இருந்து குணமடைந்த உணவுத் துறை அமைச்சா் ஆா். காமராஜ் திருவாரூா் மாவட்ட மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளாா்.

உடல்நலம் பாதிப்பு காரணமாக அமைச்சா் காமராஜ், சென்னையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சில தினங்களுக்கு முன்பு அனுமதிக்கப்பட்டாா். அவா் விரைவில் குணமடைய வேண்டும் என திருவாரூா் மாவட்ட மக்கள் சாா்பில் ஆலயங்களில் சிறப்பு பிராா்த்தனைகள் நடைபெற்றன.

இந்நிலையில், 3 நாள்களில் சிகிச்சை முடிந்து, உடல்நலம் பெற்று கடந்த ஜனவரி 11-ஆம் தேதி அமைச்சா் வீடு திரும்பினாா். இதைத்தொடா்ந்து அவா் தெரிவித்தது:

விரைந்து குணம் அடைந்ததற்கு மருத்துவா்களின் சிகிச்சையும், பொதுமக்களின் அன்பான வாழ்த்துகளும், அவா்கள் செய்த பிராா்த்தனைகளுமே காரணம். இதை எந்த நாளும் நன்றியுடன் நினைத்து மக்கள் பணியாற்றுவேன். அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com