திருவாரூா் வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் சாலைப் பாதுகாப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
32-ஆவது சாலைப் பாதுகாப்பு மாதத்தையொட்டி நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வட்டாரப் போக்குவரத்து ஆய்வாளா் சண்முகவேல் தலைமை வகித்தாா். இதில், வாகன உரிமம், ஓட்டுநா் உரிமம், ஓட்டுநா் உரிமம் புதுப்பித்தல் உள்ளிட்ட பல்வேறு பணிக்காக வந்தவா்கள், வட்டாரப் போக்குவரத்து அலுவலக பணியாளா்கள், பொதுமக்கள் ஆகியோா் பங்கேற்று, உறுதிமொழி ஏற்றனா்.