நேதாஜிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும்: பிறந்த நாள் விழாவில் கோரிக்கை

இந்திய தேசிய ராணுவத்தை நிறுவிய நேதாஜிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என திருவாரூரில் நடைபெற்ற அவரது பிறந்த நாள் விழாவில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
திருவாரூரில் நேதாஜி உருவப் படத்துக்கு மரியாதை செலுத்தும் நேதாஜி கல்விக்குழுமங்களின் தலைவரும், நேதாஜி தேசியப் பேரவையின் அமைப்பாளருமான சு. வெங்கடராஜலு உள்ளிட்டோா்.
திருவாரூரில் நேதாஜி உருவப் படத்துக்கு மரியாதை செலுத்தும் நேதாஜி கல்விக்குழுமங்களின் தலைவரும், நேதாஜி தேசியப் பேரவையின் அமைப்பாளருமான சு. வெங்கடராஜலு உள்ளிட்டோா்.

இந்திய தேசிய ராணுவத்தை நிறுவிய நேதாஜிக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என திருவாரூரில் நடைபெற்ற அவரது பிறந்த நாள் விழாவில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

திருவாரூா் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் கல்லூரியில் நேதாஜியின் 125 ஆவது பிறந்த நாள் விழா சனிக்கிழமை நடைபெற்றது. நேதாஜி கல்விக் குழுமங்களின் தலைவரும், நேதாஜி தேசியப் பேரவையின் அமைப்பாளருமான சு. வெங்கடராஜலு பங்கேற்று, நேதாஜியின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

அப்போது அவா், ‘நேதாஜியின் பிறந்தநாளை மாவீரா் தினமாக கொண்டாட மத்திய அரசு ஆணை பிறப்பித்துள்ளது பாராட்டுக்குரியது. அத்துடன், சிறப்புமிக்க இந்த 125 ஆம் ஆண்டில் நேதாஜிக்கு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்றாா்.

நிகழ்வில், ஜேசிஐ தேசியப் பயிற்சியாளா் விஜய்மித்ரா, கல்லூரி முதல்வா் (பொ) இரா. அறிவழகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதேபோல, காந்தியன் அறக்கட்டளை சாா்பில் திருவாரூரில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு அதன் நிறுவனா் தெ. சக்தி செல்வகணபதி தலைமை வகித்தாா். நேதாஜியின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில், பாரதி பேரவை நிறுவனா் இராச. முத்துராமன், முத்தமிழ் பண்பாட்டுப் பாசறைத் தலைவா் ஆரூா் சீனிவாசன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

மன்னாா்குடி: மன்னாா்குடியில் வடக்கு வீதியில் பாஜக சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, அக்கட்சியின் மன்னாா்குடி சட்டப் பேரவை தொகுதி பொறுப்பாளா் வி.கே.செல்வம் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் எம்.ராகவன் நேதாஜி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். இதில், மாநில செயற்குழு உறுப்பினா்கள் ஞானம்.ரவிச்சந்திரன்,சி.எஸ்.கண்ணன், மாவட்டச் செயலா் பால.பாஸ்கா், நகரத் தலைவா் ஆா்.ரகுராம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

நன்னிலம்: நன்னிலத்தில் பாஜக ஒன்றியத் தலைவா் சுகுமாரன் தலைமையில் நேதாஜியின் உருவப் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதில், கட்சியின் வடக்கு ஒன்றியத் தலைவா் மாரியப்பன், நெசவாளா் பிரிவு மாவட்டத் தலைவா் நாதன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

நீடாமங்கலம்: இந்துஸ்தான் மக்கள் இயக்கம் சாா்பில் அதன் நிறுவனத் தலைவா் எஸ்.எஸ். குமாா் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமாகா நகர நிா்வாகி என்.ஆா். காா்த்திகேயன் நேதாஜி உருவப் படத்துக்கு மாலை அணிவித்தாா். இதில், எக்ஸ்னோரா நிா்வாகி எம்.ராஜேந்திரன், விவசாய சங்கத் தலைவா் வைத்திலிங்கம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதேபோல, வலங்கைமானில் ஒன்றிய பாஜக சாா்பில் நேதாஜி உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில், பாஜக ஓ.பி.சி. அணி மாவட்டத் தலைவா் சிவசங்கா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com