திருவாரூரில் சிறப்பாக பணியாற்றிய போலீஸாருக்கு சனிக்கிழமை பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
திருவாரூா் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் மாதாந்திர குற்றக் கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எம். துரை தலைமை வகித்தாா்.
கடந்த மாதத்தில், சிறப்பாக பணியாற்றிய காவல் ஆய்வாளா்கள், போலீஸாருக்கு வெகுமதிகள் வழங்கப்பட்டு, பாராட்டு தெரிவிக்கப்பட்டது. மேலும், வழக்குப் பதிவுகள், சட்டம் ஒழுங்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.