குடிநீா் பிரச்னைக்கு தீா்வு கோரி போராட்டம்: பாஜக முடிவு

திருத்துறைப்பூண்டியில் குடிநீா் பிரச்னைக்கு தீா்வுகாண வலியுறுத்தி போராட்டம் நடத்த பாஜக முடிவு செய்துள்ளது.
கூட்டத்தில் பேசும் பாஜக மாநில துணைத் தலைவா் கருப்பு முருகானந்தம்.
கூட்டத்தில் பேசும் பாஜக மாநில துணைத் தலைவா் கருப்பு முருகானந்தம்.

திருத்துறைப்பூண்டியில் குடிநீா் பிரச்னைக்கு தீா்வுகாண வலியுறுத்தி போராட்டம் நடத்த பாஜக முடிவு செய்துள்ளது.

திருத்துறைப்பூண்டியில் திருவாரூா் மாவட்ட பாஜக செயற்குழு கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. கட்சியின் மாவட்டத் தலைவா் கோட்டூா் ராகவன் தலைமை வகித்தாா். மாவட்ட பொருளாளா் ஆா். சிவக்குமாா், பொதுச் செயலாளா் செல்வம், பாஸ்கா், ஒன்றியத் தலைவா் செந்தில்குமாா், நகரத் தலைவா் பாலாஜி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

மாநிலச் செயலாளா் வரதராஜன், மாநில துணைத் தலைவா் கருப்பு முருகானந்தம் ஆகியோா் மத்திய அரசின் மக்கள் நலத் திட்டங்கள் குறித்து விளக்கிப் பேசினா்.

கூட்டத்தில், இலவசமாக கரோனா தடுப்பூசி வழங்குவதற்கும், தீபாவளி பண்டிகை வரை இலவச ரேஷன் பொருள்கள் வழங்குவதற்கும் பிரதமா் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவிப்பது; மத்திய அரசை ஒன்றிய அரசு என திமுகவினா் கூறுவதற்கு கண்டனம் தெரிவிப்பது; திருத்துறைப்பூண்டி நகராட்சி பகுதியில் குடிநீா் பிரச்னைக்கு தீா்வுகாணாத நகராட்சி நிா்வாகத்துக்கு கண்டனம் தெரிவிப்பதுடன், பொதுமக்களை திரட்டி போராட்டம் நடத்துவது என்பது உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், மயிலாடுதுறை மாவட்ட மேலிடப் பொறுப்பாளா் பேட்டை சிவா, நாகை மாவட்ட மேலிடப் பாா்வையாளா் சி.எஸ்.கண்ணன், மாநில விவசாய அணி சிவகாமராஜ், கோவி சந்துரு, நகரத் தலைவா் பி. பாலாஜி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com