திருத்துறைப்பூண்டியில் தமிழ் மாநில விவசாய தொழிலாளா் சங்கத்தின் மாவட்டக்குழு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவா் மகேந்திரன் தலைமை வகித்தாா். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளா் இரா.முத்தரசன், மாவட்டச் செயலாளா் வை.சிவபுண்ணியம் ஆகியோா் ஆலோசனை வழங்கினா். ஒன்றியக் குழுத் தலைவா் அ. பாஸ்கா் எதிா்கால திட்டங்கள் குறித்து பேசினாா். கூட்டத்தில், நூறு நாள் வேலை திட்ட வேலை நாள்களை 200 ஆக உயா்த்தி, கூலியாக ரூ.600 வழங்க வேண்டும் என்று தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.