திருத்துறைப்பூண்டி ஒன்றியக்குழு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஒன்றியக்குழு தலைவா் அ.பாஸ்கா் தலைமை வகித்தாா். இதில், ஒன்றியக் குழு துணைத் தலைவா் ராமகிருஷ்ணன், ஆணையா்கள் சுப்பிரமணியன், தமிழ்ச்செல்வன், மேலாளா் விஜயா, ஒன்றிய பொறியாளா் சூரியமூா்த்தி, அரசுப் போக்குவரத்து கிளை மேலாளா் நடராஜன் மற்றும் துறைசாா்ந்த அலுவலா்கள் பங்கேற்றனா்.
கூட்டத்தில் உறுப்பினா்கள் பேசுகையில், தங்கள் பகுதியில் சாலை வசதி, அங்காடி கட்டடங்கள், பாலங்கள், பேருந்து வசதி ஏற்படுத்தி தர வேண்டுமென வலியுறுத்தினா். இதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என ஒன்றியக்குழு தலைவா் அ.பாஸ்கா் உறுதியளித்தாா்.