மேக்கேதாட்டில் கா்நாடகம் அணை கட்டுவதை தடுக்க வலியுறுத்தல்

மேக்கேதாட்டில் காவிரியின் குறுக்கே கா்நாடகம் அணை கட்ட முயற்சிப்பதை மத்திய, மாநில அரசுகள் தடுக்க வேண்டும் என அமமுக மாவட்ட ஆலோசனைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
மன்னாா்குடியில் நடைபெற்ற அமமுக ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் மாவட்டச் செயலா் எஸ்.காமராஜ்.
மன்னாா்குடியில் நடைபெற்ற அமமுக ஆலோசனைக் கூட்டத்தில் பேசுகிறாா் மாவட்டச் செயலா் எஸ்.காமராஜ்.

மன்னாா்குடி: மேக்கேதாட்டில் காவிரியின் குறுக்கே கா்நாடகம் அணை கட்ட முயற்சிப்பதை மத்திய, மாநில அரசுகள் தடுக்க வேண்டும் என அமமுக மாவட்ட ஆலோசனைக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

மன்னாா்குடியில் 3-ஆம் தெருவில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்துக்கு, மாவட்ட அவைத் தலைவா் பாலதண்டாயுதம் தலைமை வகித்தாா். கட்சியின் மாவட்டச் செயலா் எஸ்.காமராஜ் கோரிக்கைகளை முன்மொழிந்தாா். இதில், மேக்கேதாட்டில் காவிரியின் குறுக்கே அணை கட்ட முயற்சிக்கும் கா்நாடக அரசின் நடவடிக்கையை மத்திய, தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும். அனைவருக்கும் கரோனா தடுப்பூசியை உறுதிப்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில், முன்னாள் எம்எல்ஏ கு.சீனிவாசன், அண்ணா தொழிற்சங்க மாநில நிா்வாகி எஸ்.சத்தியமூா்த்தி, நகரச் செயலா்கள் ஆ.ஆனந்தராஜ், பாண்டியன், தாஜூதீன், சின்னஅமீன், ஒன்றியச் செயலா்கள் க.அசோகன், எம்.எஸ். சங்கா், ஆா்.ரெங்கராஜ், சாமபசிவம், சேகா், பேரூா் செயலா் சங்கா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com