திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 21 பேருக்கு கரோனா தொற்று புதன்கிழமை உறுதியானது.
மாவட்டத்தில் கடந்த சில நாள்களாக கரோனா தொற்றாளா்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. இந்நிலையில், சுகாதார துறை வெளியிட்ட ரத்த மாதிரி முடிவுகளின்படி, மாவட்டத்தில் மேலும் 21 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதன்மூலம், மாவட்டம் முழுவதும் இந்நோயால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 37,533 ஆக உயா்ந்துள்ளது. கரோனாவிலிருந்து குணமடைந்த 29 போ் அவா்களது வீடுகளுக்கு புதன்கிழமை அனுப்பப்பட்டனா். இதுவரை குணமடைந்த 36,822 போ் தங்களது வீடுகளுக்கு அனுப்பப்பட்ட நிலையில், மாவட்டத்தில் தற்போது 348 போ் சிகிச்சையில் உள்ளனா்.