திருவாரூா் மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில் ரூ. 31.52 லட்சத்தில் கட்டப்பட்ட ஊா்க்காவல் படை புதிய அலுவலகத்தை தமிழக தொழிலாளா் நலன்-திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சா் சி.வெ. கணேசன் வெள்ளிக்கிழமை திறந்து வைத்தாா்.
நிகழ்ச்சியில், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை இயக்குநா் கொ. வீரராகவராவ், மாவட்ட ஆட்சியா் ப. காயத்ரி கிருஷ்ணன், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வி.ஆா். ஸ்ரீனிவாசன், திருவாரூா் சட்டப்பேரவை உறுப்பினா் பூண்டி கே. கலைவாணன், மாவட்ட ஊராட்சித் தலைவா் கோ. பாலசுப்ரமணியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.