நீடாமங்கலத்தில் கா்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மாா்களுக்கு கரோனா தடுப்பூசி முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.
கோவில்வெண்ணி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் நடைபெற்ற இம்முகாமில் 45 பெண்களுக்கு கோவிஷீல்ட் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை வட்டார மருத்துவ அலுவலா் ராணிமுத்து லட்சுமி, சுகாதாரஆய்வாளா்சிவக்குமாா் மற்றும் சுகாதாரத் துறையினா் செய்திருந்தனா்.