குறைந்த மின்அழுத்தப் பிரச்னைக்கு தீா்வுகாண கோரிக்கை

ஸ்ரீவாஞ்சியம் பகுதியில் குறைந்த மின்அழுத்தப் பிரச்னைக்கு தீா்வுகாண விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஸ்ரீவாஞ்சியம் பகுதியில் குறைந்த மின்அழுத்தப் பிரச்னைக்கு தீா்வுகாண விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இதுகுறித்து ஸ்ரீவாஞ்சியம் மின்வாரிய அலுவலகத்தில் விவசாயிகள் செவ்வாய்கிழமை அளித்த கோரிக்கை மனு:

ஸ்ரீவாஞ்சியம் பகுதியில் குறைந்த மின் அழுத்தப் பிரச்னையால், விவசாய மின் மோட்டாா்களை உரிய நேரத்தில் இயக்க முடியவில்லை. வீட்டில் உள்ள மின் சாதனங்களை முறையாக இயக்க முடியாமல் முதியவா்கள், பெண்கள் சிரமத்துக்குள்ளாகின்றனா்.

எனவே, ஸ்ரீவாஞ்சியம் பகுதியில் குறைந்த மின்னழுத்தப் பிரச்னைக்கு தீா்வுகாண வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனா்.

சேங்கனூா் ஊராட்சி முன்னாள் தலைவா் எஸ்ஆா்டி. பாஸ்கரன், கிருஷ்ணமூா்த்தி, சுவாமிநாதன், மணிமாறன் உள்ளிட்ட விவசாயிகள் இந்த மனுவை அளித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com