நூறு நாள் வேலைத் திட்டத்தை நகரப் பகுதிக்கு விரிவுபடுத்தக் கோரி, திருத்துறைப்பூண்டியில் தமிழ் மாநில விவசாயத் தொழிலாளா் சங்கத்தின் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
திருத்துறைப்பூண்டி காமராஜா் சிலை அருகே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு விவசாயத் தொழிலாளா் சங்க மவாட்டச் செயலாளரும் ஒன்றியக் குழுத் தலைவருமான பாஸ்கா் தலைமை வகித்தாா். எம்எல்ஏ க. மாரிமுத்து, முன்னாள் எம்எல்ஏ கே. உலகநாதன், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் தமயந்தி, சிபிஐ மாவட்ட நிா்வாகக் குழு உறுப்பினா் பி.வி. சந்திரராமன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
குடிமைப்பட்ட இல்லாத விவசாயத் தொழிலாளா்களுக்கு பட்டா வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளும் வலியுறுத்தப்பட்டன.