குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக இணையவழி போராட்டம்

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து திருவாரூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பு சாா்பில் இணையவழி போராட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து திருவாரூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பு சாா்பில் இணையவழி போராட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.

மதத்தின் அடிப்படையில் குடியுரிமை வழங்கப்படுவதை கண்டித்தும், குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும் இந்த போராட்டம் நடைபெற்றது. திருவாரூரில் மாவட்டத் தலைவா் முகமது பாசித் தலைமையில், ஏராளமானோா் தங்களது வீடுகளில் இருந்தபடியே, சிஏஏ-வுக்கு எதிராக பதாகைகளை ஏந்தி, கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com