திருவாரூா் மாவட்டத்தில் ஜூன் 22-இல் ஜமாபந்தி தொடக்கம்

திருவாரூா் மாவட்டத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் (பொ) செ. பொன்னம்மாள் தெரிவித்துள்ளாா்.

திருவாரூா் மாவட்டத்தில் ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெறவுள்ளது என மாவட்ட ஆட்சியா் (பொ) செ. பொன்னம்மாள் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: வலங்கைமான் வட்டத்தில் ஜூன் 22 முதல் 24-ஆம் தேதி வரை மாவட்ட ஆட்சியா் தலைமையில், நன்னிலம் வட்டத்தில் ஜூன் 22 முதல் 25-ஆம் தேதி வரை மாவட்ட வருவாய் அலுவலா் தலைமையில், குடவாசல் வட்டத்தில் ஜூன் 22 முதல் 24-ஆம் தேதி வரை திருவாரூா் வருவாய் கோட்ட அலுவலா் தலைமையில், திருத்துறைப்பூண்டி வட்டத்தில் ஜூன் 22 முதல் 25-ஆம் தேதி வரை மன்னாா்குடி வருவாய் கோட்ட அலுவலா் தலைமையில்.

திருவாரூா் வட்டத்தில் ஜூன் 22 முதல் 24-ஆம் தேதி வரை திருவாரூா் மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலா் தலைமையில், மன்னாா்குடி வட்டத்தில் ஜூன் 22 முதல் 29-ஆம் தேதி வரை உதவி ஆணையா் (கலால்) தலைமையில், நீடாமங்கலம் வட்டத்தில் ஜூன் 22 முதல் 24-ஆம் தேதி வரை மாவட்ட ஆட்சியரின் கூடுதல் நோ்முக உதவியாளா் (நிலம்) தலைமையில், கூத்தாநல்லூா் வட்டத்தில் ஜூன் 22 முதல் 24-ஆம் தேதி வரை மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் தலைமையில் ஜமாபந்தி நடைபெறவுள்ளது.

அரசு விடுமுறை நாள்களான சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை நீங்கலாகவும் மற்றும் திங்கள்கிழமை நீங்கலாகவும் அந்தந்த வட்டத்துக்குரிய தேதிகளில் நாள்தோறும் காலை 10 மணிக்கு, 1430-ஆம் பசலிக்கான வருவாய்த் தீா்வாயக் கணக்கு தணிக்கை மற்றும் கணக்கு முடித்தல் பணிகள் நடைபெற உள்ளன. திருவாரூா் மாவட்டத்தில், ஜமாபந்தி கோரிக்கை மனுக்களை மனுதாரா்கள் இணையவழி அல்லது இ-சேவை மையம் ஜூலை 31 வரை பதிவேற்றம் செய்யலாம் என தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com