வேதாரண்யம் மருத்துவமனையில் ஆட்சியா் ஆய்வு

வேதாரண்யத்தில் உள்ள மாவட்ட தலைமை மருத்துவமனையில் நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

வேதாரண்யத்தில் உள்ள மாவட்ட தலைமை மருத்துவமனையில் நாகை மாவட்ட ஆட்சியா் பிரவீன் பி. நாயா் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

பிறகு, அவா் கூறியது:

வேதாரண்யம் அரசு மருத்துவமனை மாவட்ட தலைமை மருத்துவமனையாக தரம் உயா்த்தப்பட்டுள்ளதால் உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவது தொடா்பான வரைவு திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. விரைவில் பணிகள் தொடங்கப்படும். இங்கு நிறுவப்பட்டுவரும் ஆக்சிஜன் உற்பத்தி ஆலையின் பணிகள் அடுத்த சில நாள்களில் முடிவடையும். ஜூன் 20 ஆம் தேதிகளில் ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கும் என்றாா்.

முன்னதாக, பொதுப்பணித் துறை, மருத்துவத்துறை அதிகாரிகளுடன் ஆட்சியா் ஆலோசனை மேற்கொண்டாா். ஆய்வின்போது, வேதாரண்யம் கோட்டாட்சியா் துரைமுருகன், நகராட்சி ஆணையா் ஜி. மகேஸ்வரி, மருத்துவா் தனசேகரன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com