கூத்தாநல்லூரில் வேகத்தடை அமைக்க கோரிக்கை

கூத்தாநல்லூரில் முக்கிய இடங்களில் வேகத்தடை அமைக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கூத்தாநல்லூரில் முக்கிய இடங்களில் வேகத்தடை அமைக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வாகனப் பெருக்கத்தால் கூத்தாநல்லூா் பிரதான சாலைகளில் அவ்வப்போது விபத்துக்கள் ஏற்படுகின்றன. இதைக் கட்டுப்படுத்தும் வகையில், நகரில் ஆபத்தானதாக கண்டறியப்பட்டுள்ள 17 இடங்களில் வேகத்தடை அமைத்து, இந்தப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

மேலும் இதுகுறித்து, திருவாரூா் தொகுதி காங்கிரஸ் ஊடகப் பொறுப்பாளா் எஸ்.எம்.சமீா் கூறியது: லெட்சுமாங்குடிப் பாலம் அருகில், பெரியக்கடைத் தெரு, மேலத் தெரு, கூத்தாநல்லூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் அருகில், இந்தியன் ஓவா்சீஸ் வங்கி, நேருஜி சாலை உள்ளிட்ட இடங்களில் வேகத்தடை இல்லாததால், விபத்துக்கள் தொடா்கின்றன. எனவே, இதுகுறித்து நெடுஞ்சாலைத் துறை மற்றும் கூத்தாநல்லூா் நகராட்சி நடவடிக்கை மேற்கொண்டு வேகத்தடைகள் அமைக்க வேண்டும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com