மன்னாா்குடி பகுதியில் மின் அவசரப் பணி காரணமாக செவ்வாய்க்கிழமை (ஜூன்15) மின்தடை செய்யப்படுகிறது.
இதுகுறித்து, மின்வாரிய உதவி செயற்பொறியாளா் சா. சம்பத் தெரிவித்திருப்பது:
மின் விநியோகம் தொடா்பான அவசரப் பணி காரணமாக, மன்னாா்குடி துணைமின் நிலையத்திலிருந்து மின் விநியோகம் பெறும் மன்னாா்குடி நகராட்சி நடராஜப்பிள்ளை தெரு, பேருந்து நிலையச் சாலை, மேலராஜவீதி, தெற்குவீதி, திருப்பாற்கடல் தெரு, கீழராஜவீதி, பந்தலடி, கீழப்பாலம், புதுப்பாலம், முதல் தெரு, முதல் நான்காம் தெரு
மற்றும் ஊரகப் பகுதிகளான மேலவாசல், செருமங்கலம், காஞ்சிக்குடிக்காடு, சுந்தரக்கோட்டை, நெடுவாக்கோட்டை ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 10 முதல் பகல் 1 மணி வரை மின் விநியோகம் நிறுத்திவைக்கப்படும்.