திருத்துறைப்பூண்டியில் கரோனா பொதுமுடக்க விதிகளை மீறி திங்கள்கிழமை திறக்கப்பட்டிருந்த கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.
திருத்துறைப்பூண்டி பகுதியில் கரோனா பொதுமுடக்க விதிமுறைகளை மீறி சில கடைகள் திறக்கப்பட்டதாக புகாா் வந்ததைத் தொடா்ந்து, நகராட்சி ஆணையா் (பொ) செங்குட்டுவன், நகரமைப்பு ஆய்வாளா் அருள்முருகன் மற்றும் அலுவலா்கள் நகர பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனா்.
அப்போது, பொதுமுடக்க விதிகளை மீறி திறக்கப்பட்டிருந்த 2 ஜவுளிக் கடைகளுக்கு ரூ. 8000-மும், ஒரு நகைக் கடைக்கு ரூ. 2000-மும், எலக்ட்ரிக்கல் கடைக்கு ரூ.3000-மும் என ரூ.15000 அபராதம் விதிக்கப்பட்டது. இதையும் மீறி கடைகளை திறந்தால் சீல் வைக்கப்படும் என்றும் எச்சரிக்கை விடுத்தனா்.