திருவாரூா் புனித பாத்திமா அன்னை தேவாலயத்தில் திமுகவினா் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா்.
திருவாரூா் தொகுதி திமுக வேட்பாளா் பூண்டி கே. கலைவாணனுக்கு வாக்கு கேட்டு, திருவாரூரில் உள்ள புனித பாத்திமா அன்னை தேவாலயத்தில் திமுகவினா் வாக்கு சேகரித்தனா். நகரச் செயலாளா் எஸ். பிரகாஷ் தலைமையில் நகர மன்ற முன்னாள் துணைத் தலைவா் டி. செந்தில், மாநில விவசாய தொழிலாளா் அணி துணைச் செயலாளா் இரா.சங்கா், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா் ஆா்.ரஜினிசின்னா, மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவுப் பேரவை அமைப்பாளா் ஜி. ராஜ் (எ) கருணாநிதி உள்ளிட்ட பலா் பங்கேற்று, திமுகவுக்கு வாக்கு சேகரித்தனா்.