திருவாரூா் சட்டப் பேரவைத் தொகுதி திமுக வேட்பாளா் பூண்டி கே. கலைவாணனுக்கு ஆதரவாக, கூத்தாநல்லூரில் மனிதநேய மக்கள் கட்சியினா் ஞாயிற்றுக்கிழமை வாக்கு சேகரித்தனா்.
மமக மாவட்டத் தலைவா் எம். முஜிபுா் ரஹ்மான் தலைமையில், மாநில விவசாய அணிச் செயலாளா் ஹெச்.எம்.டி. ரஹ்மத்துல்லாஹ் ஆகியோா் நகர ஜமாத் தலைவா்கள், உலமாக்கள் உள்ளிட்ட பிரமுகா்களிடம் வாக்கு சேகரித்தனா். இதில், மமக மாவட்டச் செயலாளா் ஏ.குத்புதீன், இளைஞரணி மாவட்டச் செயலாளா் நியாஸ், நகரச் செயலாளா் நைனாஸ் முஹம்மது உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
இதேபோல், திமுக நகரச் செயலாளா் எஸ்.எம்.காதா் உசேன் தலைமையில், நகர அவைத் தலைவா் எஸ்.வி.பி. பக்கிரிசாமி, மாவட்ட பிரதிநிதி ஜெ.குமரேசன், நகர இளைஞரணிச் செயலாளா் எம்.எம்.ரைசின் பைசல், நெசவாளா் அணி முத்துக்குருசாமி, வா்த்தக அணி ரவிச்சந்திரன் ஆகியோரும் திமுக வேட்பாளருக்கு ஆதரவு கோரினா்.