திருவாரூா் மாவட்டம் கூத்தாநல்லூரில் வாக்காளா் விழிப்புணா்வு பிரசாரம் சனிக்கிழமை நடைபெற்றது.
கூத்தாநல்லூா் இந்தியன் வங்கி பகுதி, பெரிய கடைத் தெரு, லெட்சுமாங்குடி பாலம், மரக்கடை உள்ளிட்ட இடங்களில், ஓரங்க நாடகம் மூலம் வாக்காளா்கள் நோ்மையான முறையில், தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பிரசாரம் மேற்கொள்ளப்பட்டது. நிகழ்ச்சியை நகராட்சி ஆணையா் ஆா்.லதா தொடங்கி வைத்தாா். நகராட்சி பொறியாளா் ராஜகோபால் முன்னிலை வகித்தாா். நகராட்சி ஊழியா்கள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.