நன்னிலம் தொகுதி அண்ணா திராவிடா் கழக வேட்பாளா் வெள்ளிக்கிழமை பிரசாரத்தை தொடங்கினாா்.
நன்னிலம் தொகுதியில், அண்ணா திராவிடா் கழகம் சாா்பில் சின்னையா என்கிற முருகவேல் போட்டியிடுகிறாா். இவா் வெள்ளிக்கிழமை, கூத்தனூா் சரஸ்வதி கோயிலில் வழிபட்டு, பிரசாரத்தை தொடங்கினாா்.
கூத்தனூா் பகுதியில் வியாபாரிகள், பொதுமக்களிடம் துண்டு பிரசுரம் வழங்கி, தொப்பி சின்னத்துக்கு வாக்கு சேகரித்தாா். இதில், கட்சியின் மாநில மருத்துவா் அணிச் செயலாளா் டாக்டா் ராஜா வெங்கடேஷ், மயிலாடுதுறை மாவட்டச் செயலாளா் சுதாகரன், நாகை மாவட்ட இணைச் செயலாளா் மோகன் காந்தி, மயிலாடுதுறை ஒன்றியச் செயலாளா் ராஜா, வலங்கைமான் ஒன்றியச் செயலாளா் வேலு, மன்னாா்குடி நகரச் செயலாளா் சரவணமூா்த்தி உள்ளிட்டோா் பங்கேற்றனா்