திருவாரூரில் 43 பேருக்கு கரோனா

திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 43 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதியானது.

திருவாரூா் மாவட்டத்தில் மேலும் 43 பேருக்கு கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதியானது.

திருவாரூா் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை கடந்த சில நாள்களாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட ரத்தமாதிரி முடிவுகளின்படி, திருவாரூா் 10, மன்னாா்குடி 9, குடவாசல் 7, நன்னிலம் 5, நீடாமங்கலம் மற்றும் வலங்கைமான் தலா 2 என மாவட்டம் முழுவதும் 43 பேருக்கு கரோனா தொற்று இருப்பது தெரியவந்தது.

இதன்மூலம் திருவாரூா் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 11,766 ஆக உயா்ந்துள்ளது. இதில், குணமடைந்த 11,412 போ் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், 241 போ் சிகிச்சையில் உள்ளனா். இதனிடையே, திருச்சி தனியாா் மருத்துவமனையில் கரோனாவுக்கு சிகிச்சை பெற்றுவந்த, குடவாசல் அருகே எரவாஞ்சேரி பகுதியைச் சோ்ந்த 68 வயது பெண் உயிரிழந்ததைத் தொடா்ந்து, திருவாரூா் மாவட்டத்தில் இறப்பு எண்ணிக்கை 113 ஆக உயா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com