திருத்துறைப்பூண்டி அருள்மிகு பிறவி மருந்தீஸ்வரர் ஆலயத்தில் வி.கே.சசிகலா சுவாமி தரிசனம் செய்தார்.
பிறவி மருந்தீசர் ஆலயத்தில் பிறவி மருந்தீஸ்வரர் பெரியநாயகி அம்பாள் கஜசம்ஹாரமூர்த்தி உள்ளிட்ட சுவாமிகளுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டார்.
பின்னர் அவரது பூர்வீக இல்லத்திற்கு அருகே உள்ள பாதாள விநாயகர் ஆலயம், காளியம்மன் ஆலயம், செட்டி தெரு மாரியம்மன் கோவில் ஆகிய ஆலயங்களிலும் தரிசனம் செய்த பின்னர் ராமேஸ்வரம் புறப்பட்டுச் சென்றார்.