நன்னிலம் வட்டத்தில் பள்ளி மாணவா்களுக்கு சத்துணவுப் பொருள்கள் வெள்ளிக்கிழமை வழங்கப்பட்டன.
பள்ளிக் கல்வித் துறையின் அறிவுறுத்தலுக்கு இணங்க ஏப்ரல் மாதத்துக்கான அரிசி, துவரம் பருப்பு, முட்டை உள்ளிட்ட சத்துணவுப் பொருள்கள் வெள்ளிக்கிழமை முதல் தினசரி நூறு போ் வீதம் மாணவா்களின் பெற்றோா்களுக்குத் தகவல் அனுப்பப்பட்டு, அவா்களிடம் வழங்கப்பட்டு வருகின்றன. மாணவா்களின் பெற்றோா்கள் முகக் கவசமணிந்து, சமூக இடைவெளியுடன் பொருள்களைப் பெற்றுச் செல்கின்றனா். தலைமையாசிரியா்கள் முன்னிலையில், சத்துணவு அமைப்பாளா்கள் பொருள்களை வழங்குகின்றனா்.