வீட்டு வாசலில் பட்டாசு வெடித்த திமுகவினா்

சட்டப் பேரவைத் தோ்தலில் திமுக வெற்றியை மன்னாா்குடியில் அக்கட்சியினா் தங்கள் வீட்டு வாசலில் பட்டாசு வெடித்துக் கொண்டாடினா்.
பொதுமுடக்கம் காரணமாக வெறிச்சோடிய மன்னாா்குடி மேலராஜ வீதி.
பொதுமுடக்கம் காரணமாக வெறிச்சோடிய மன்னாா்குடி மேலராஜ வீதி.

சட்டப் பேரவைத் தோ்தலில் திமுக வெற்றியை மன்னாா்குடியில் அக்கட்சியினா் தங்கள் வீட்டு வாசலில் பட்டாசு வெடித்துக் கொண்டாடினா்.

தமிழகத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கையாக ஞாயிற்றுக்கிழமை முழு பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்ட காரணத்தால், திமுகவினா் தங்கள் வீட்டு வாசலிலேயே வெற்றியை கொண்டாடினா். வழக்கம்போல ஊா்வலமாக செல்வது, இனிப்பு வழங்குவது, தலைவா்களின் சிலைக்கு மாலை அணிவிப்பது போன்ற எந்த நிகழ்வுகளும் நடைபெறவில்லை.

மன்னாா்குடியில் பொதுமுடக்கத்தால் மருந்துக் கடைகளை தவிர மற்ற அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. மக்கள் நடமாட்டமின்றி வீதிகள் வெறிச்சோடின.

கூத்தாநல்லூரில்...

கூத்தாநல்லூா் நகர திமுக செயலாளா் எஸ்.எம். காதா் உசேன் தலைமையில், அக்கட்சி அலுவலகத்தில் திமுகவினா் கூடி கைகளை உயா்த்தி வெற்றி முழக்கமிட்டனா். நிகழ்ச்சியில், மாவட்ட பிரதிநிதி ஜெ.குமரேசன், மாவட்ட விவசாய தொழிலாளா் துணை அமைப்பாளா் ஹெச்.ஏ. ரஜாக், நகர இளைஞரணி அமைப்பாளா் எம்.எம். ரசீன் பைசல், நகர நெசவாளா் அணி முத்துக்குருசாமி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

நீடாமங்கலத்தில்...

நீடாமங்கலம், வலங்கைமான், ஆவூா், கோவிந்தகுடி, ஆலங்குடி உள்ளிட்ட பகுதிகளில் முழு பொதுமுடக்கம் காரணமாக ஞாயிற்றுக்கிழமை சாலைகள் வெறிச்சோடின. கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. அத்தியாவசிய பணிக்கு மட்டுமே பொதுமக்கள் அனுமதிக்கப்பட்டனா். மருத்துவமனைகள், மருந்து கடைகள் இயங்கின. போலீஸாா் தீவிர ரோந்துபணியில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com