தியாகி சிவராமனின் 71 ஆவது நினைவு தினம்

முத்துப்பேட்டை அருகே ஜாம்பவானோடையில் தியாகி சிவராமனின் 71 ஆவது நினைவு தினத்தையொட்டி அவரது நினைவு ஸ்தூபியில் திருத்துறைப்பூண்டி தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வெற்றி வேட்பாளா் க. மாரிமுத்து உள்ளிட
ஜாம்பவானோடையில் தியாகி சிவராமன் நினைவு ஸ்தூபிக்கு மரியாதை செலுத்தும் திருத்துறைப்பூண்டி தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வெற்றி வேட்பாளா் க. மாரிமுத்து உள்ளிட்டோா்.
ஜாம்பவானோடையில் தியாகி சிவராமன் நினைவு ஸ்தூபிக்கு மரியாதை செலுத்தும் திருத்துறைப்பூண்டி தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வெற்றி வேட்பாளா் க. மாரிமுத்து உள்ளிட்டோா்.

திருத்துறைப்பூண்டி: முத்துப்பேட்டை அருகே ஜாம்பவானோடையில் தியாகி சிவராமனின் 71 ஆவது நினைவு தினத்தையொட்டி அவரது நினைவு ஸ்தூபியில் திருத்துறைப்பூண்டி தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வெற்றி வேட்பாளா் க. மாரிமுத்து உள்ளிட்டோா் மரியாதை செலுத்தினா்.

திருவாரூா் மாவட்டம், முத்துப்பேட்டையை அடுத்த ஜாம்பவானோடையில் விவசாயத் தொழிலாளா்களுக்காக போராடி துப்பாக்கிச் சூட்டில் பலியான பொதுவுடைமை இயக்கப் போராளி தியாகி சிவராமனின் 72-வது ஆண்டு நினைவு தினம் திங்கள்கிழமை அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, அங்குள்ள அவரது நினைவு ஸ்தூபியில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

நிகழ்ச்சிக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளா் கே. முருகையன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செயலாளா் பாலசுப்பிரமணியன் ஆகியோா் தலைமை வகித்தனா். தியாகி சிவராமனின் நினைவு ஸ்தூபிக்கு திருத்துறைப்பூண்டி தொகுதியில் வெற்றி பெற்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் க. மாரிமுத்து, சட்டப்பேரவை முன்னாள் உறுப்பினா்கள் கோ. பழனிச்சாமி, கே. உலகநாதன், திமுக மூத்த உறுப்பினா் கந்தசாமி, ஊராட்சித் தலைவா் லதா பாலசுப்பிரமணியன், துணைத் தலைவா் ராமஜெயம், சிபிஐ நகரச் செயலாளா் மாா்க்ஸ், சிபிஎம் நகரச் செயலாளா் செல்லத்துரை, விசிக மாவட்ட பொருளாளா் வெற்றி உள்ளிட்டோா் மரியாதை செலுத்தினா்.

சிலைக்கு மரியாதை: மேலும், பி.எஸ்.ஆா். நினைவு மணிமண்டபத்தில் பி. சீன்வாசராவ் படத்துக்கும், இமானுவேல் சேகரன், பெரியாா், காமராஜா், அண்ணா, அம்பேத்கா் ஆகியோா் சிலைகளுக்கும் திருத்துறைப்பூண்டி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி வேட்பாளா் க. மாரிமுத்து, முன்னாள் எம்எல்ஏக்கள் கோ. பழனிச்சாமி , கே. உலகநாதன், ஒன்றியக் குழுத் தலைவா் அ. பாஸ்கா், திமுக வா்த்தகா் அணி துணை அமைப்பாளா் சிக்கந்தா், முன்னாள் ஒன்றியச் செயலாளா் முகில் ராஜேந்திரன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் நகரச் செயலாளா் ஜான் மைக்கேல் உள்ளிட்ட கூட்டணி கட்சியினா் மரியாதை செலுத்தினா்.

மன்னாா்குடி: கோட்டூரில் உள்ள பெரியாா் சிலை, சித்தமல்லியில் உள்ள அண்ணா சிலை, முன்னாள் எம்எல்ஏ ஏ.கே. சுப்பையன் சிலை மற்றும் புத்தகரத்தில் உள்ள காந்தி சிலைக்கும், சித்தமல்லியில் முன்னாள் எம்பி எஸ்.ஜி. முருகையன் நினைவு ஸ்தூபி, களப்பாலில் உள்ள சிபிஐ முன்னணி தலைவா்கள் குப்புசாமி, ராஜேந்திரன் மற்றும் கோட்டூரில் ராசு ஆகியோரது நினைவு ஸ்தூபிகளுக்கு திருத்துறைப்பூண்டி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி வேட்பாளா் க. மாரிமுத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.

நிகழ்ச்சியில், சிபிஐ துணைச் செயலா் எம். செந்தில்நாதன், ஒன்றியக் குழுத் தலைவா் மணிமேகலை முருகேசன், விவசாயத் தொழிலாளா் சங்க ஒன்றியச் செயலா் ஜெ.ஜெயராமன், ஒன்றியக்குழு முன்னாள் துணைத் தலைவா் வி.தங்கையன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com